திருச்சி மாவட்டம், தாளக்குடியில் வாய்க்கால் பாலம் உடைந்து விழுந்ததால் கிராம மக்கள் அவதிக்கு ஆளாகினர்.
தாளக்குடியில் கடந்த 35 வருடங்களுக்கு முன்னதாக அய்யன் வாய்க்கால் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இதன் மூலம் கொள்ளிடம் ஆற்று கரையோரத்தில் உள்ள விவசாய நிலத்திற்கும், இடுகாட்டிற்கும் மக்கள் சென்று வந்தனர்.
இந்நிலையில் வலுவிழந்து காணப்பட்ட வாய்க்கால் பாலம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து, லால்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது உடனடியாக பாலத்தை மீண்டும் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.