ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நடந்த மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில், வீட்டுமனை பட்டா இருக்கு இடத்தை காணவில்லை என்ற பேனருடன் வந்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து அவர்களிடம் விசாரித்துவிட்டு பேனரை பறிமுதல் செய்த போலீசார், அமைச்சரிடம் மனு அளிக்க அனுமதித்தனர்.
அப்போது, தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச பட்டாவுக்கான இடம் அங்கு இல்லை என்றும், பட்டா எண்ணை வைத்து கணினியில் பார்த்தால் புறம்போக்கு நிலம் என்று காண்பிப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.