திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்யும் பணியில் நீதிமன்ற ஊழியர்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேடசந்தூர் பகுதியை சேர்ந்த சாரங்கபாணி என்ற 70 வயது முதியவருக்கு சொந்தமான நிலம் 1988ம் ஆண்டு ரயில்வே பாதை திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டது. அதற்காக அறிவிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்யும்படி திண்டுக்கல் முதன்மை சப்-கோர்ட் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், 100 மர மேஜைகள், 50 கணினிகள், 100 மின்விசிறிகள், 3 கார்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஜப்தி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த வருவாய்துறையினர் அவகாசம் வழங்கும்படி கேட்டுக்கொள்ளவே, ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.