வேலூர் மாவட்ட வருவாய் துறையினர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வருவாய் மற்றும் நில அளவைத் துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு உயிருக்கான பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.