திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே மது போதையால் ஏற்பட்ட தகராறில் கொலை செய்து புதைக்கப்பட்ட இருவரின் உடல்களைப் போலீசார் தோண்டி எடுத்தனர்.
கச்சூரைச் சேர்ந்த ஜானகிராமன் மற்றும் ஆகாஷ் ஆகியோர், கடந்த 17-ம் தேதி காணாமல் போனதாக உறவினர்கள் பொன்னாலூர் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் காணாமல் போன இருவரையும் அவர்களின் நண்பர்களே மது போதையில் கொன்று புதைத்ததை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து கொலையாளிகள் 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புதைக்கப்பட்ட உடல்களைத் தோண்டி எடுத்தனர்.