மதுரை மாநகராட்சிக்கு 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு : அரசு ஊழியர்கள் 5 பேர் கைது!
Jun 22, 2026, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை மாநகராட்சிக்கு 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு : அரசு ஊழியர்கள் 5 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Jun 27, 2025, 03:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சிக்கு 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் அரசு ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், திமுக மண்டலத் தலைவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தனியார் கட்டடங்களுக்கான வரி வசூல் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக 2, 3, 4, 5 ஆகிய மண்டலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கட்டடங்களுக்கு வரி குறைத்து நிர்ணயிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக முந்தைய மாநகராட்சி ஆணையர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், மதுரை மாநகராட்சி 3வது மண்டல தலைவரின் நேர்முக உதவியாளரான தனசேகரன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில், முறைகேட்டில் தொடர்புடைய உதவி ஆணையாளரின் உதவியாளர் கார்த்திகேயன், இடைத்தரர்களான உசேன், ராஜேஷ் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், மண்டல தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களின் வற்புறுத்தலால் வரிவிதிப்பு குழுவினர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. 8 லட்சம் ரூபாய் வரிவிதிப்பு இருக்க கூடிய கட்டடங்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரி செலுத்தினால் போதும் என்ற அளவிற்கு வரிக்குறைப்பு செய்து மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

இது போன்ற ஆயிரக்கணக்கான கட்டடங்களுக்கு வரி விதிப்பில் முறைகேடு செய்து மாநகராட்சிக்கு 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வரி குறைப்பு விவகாரத்தில் சங்கிலி தொடர் விசாரணையால், அதிகாரிகள் முதல் ஆளும் கட்சியினர் வரை கைதாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Tags: Madurai Corporation suffers loss of Rs 200 crore: 5 government employees arrestedஅரசு ஊழியர்கள் 5 பேர் கைது
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூர் : மதுபோதையில் இருவர் கொன்று புதைப்பு – உடல்களை தோண்டி எடுத்த போலீசார்!

Next Post

கேரளா : காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய ஜீப் மீட்பு!

Related News

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies