மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாப்படுகையைச் சேர்ந்த இயற்கை விவசாயி ராமலிங்கம் என்பவர், பழங்காவேரி ஆற்றைத் தூய்மைப்படுத்த கோரி மண்டியிட்டபடியே வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
பின்னர் கடந்த 8 ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து இயற்கை விவசாயி ராமலிங்கம் போராட்டத்தைக் கைவிட்டார்.