வேடசந்தூர் அருகே அரசு பள்ளி சமையல் கூடத்தில் சிலிண்டர் வெடித்துச் சுவர் இடிந்து விழுந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பாலப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு லட்சுமி என்பவர்ச் சமையலராக வேலைப் பார்த்து வருகிறார்.
சமையல் செய்வதற்காகக் கியாஸ் அடுப்பை லட்சுமி பற்று வைத்துள்ளார். அப்போது பயங்கரத் தீப்பிழம்புடன் தீப்பற்றியதால் அதிர்ச்சியடைந்த லட்சுமி, சமையல் கூடத்தைவிட்டு அலறியடித்து வெளியே ஓடி வந்தார்.
சிறிது நேரத்தில் சிலிண்டர்ப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் சமையல் கூடத்தின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது மாணவர்கள் அப்பகுதியில் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.