திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை வாக்கு வங்கியாக மாற்றுவதற்குத் திமுக முயற்சிப்பதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
கடவுளைக் கல்லாக நினைத்து உடைக்கக் கூடியவர்கள் முருகப் பக்தர்கள் மாநாடு குறித்து பேசக்கூடாது என்றும் முருகர் மாநாட்டில் முழுக்க முழுக்கப் பக்திகளை வெளிப்படுத்தி உள்ளோம் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
முருகர்ப் பக்தர் மாநாட்டில் நாங்கள் வாக்கு சேகரிக்கவில்லை என்றும் முருகர் மாநாட்டில் பிற மதத்தை நாங்கள் புண்படுத்தவில்லை என்று நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை வாக்கு வங்கிகளாக மாற்ற திமுக முயற்சிக்கிறது என்றும் திமுகவின் குடும்ப அரசியலை வரும் காலத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் முருகப் பக்தர்கள் மாநாடு குறித்து திமுகப் பேசக்கூடாது என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.