தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் எஸ்.ஜே. சூர்யா, மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்.
முன்னதாக எஸ்.ஜே.சூர்யா பல நேர்காணல்களில் தன்னிடம் கில்லர் என்ற ஒரு கதை இருப்பதாகவும், அது தனது கனவு ப்ராஜெக்ட் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே கில்லர்ப் படத்துக்கான பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தின் கதாநாயகனாகவும் எஸ்.ஜே.சூர்யாவே நடிக்கிறார்.
இதுகுறித்துப் பேசியுள்ள எஸ்.ஜே.சூர்யா, இது ஒரு பான் இந்தியன் திரைப்படமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.