ரயில் பயணிகளின் பாதுகாவலன் : போலீசாருக்கு நண்பனாக திகழ்ந்து வரும் "டைகர்"!
Mar 15, 2026, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரயில் பயணிகளின் பாதுகாவலன் : போலீசாருக்கு நண்பனாக திகழ்ந்து வரும் “டைகர்”!

Murugesan M by Murugesan M
Jun 27, 2025, 08:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரயில் பயணிகளுக்குப் பாதுகாவலனாக, ரயில்வே போலிசாருக்கு உறுதுணையாகச் செயல்பட்டு வரும் டைகர் நாய் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. சென்னைச் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அறிவிக்கப்படாத காவலாளியாகச் செயல்பட்டு வரும் டைகர்க் குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

புரட்சித் தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில்நிலையம் சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் பிரதானமாகத் திகழ்கிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தின் பாதுகாப்பாக ஏராளமான ரயில்வே போலீசார்ப் பணியாற்றிவரும் நிலையில் அவர்களுக்கு உறுதுணையாகச் செயல்பட்டு வருகிறது டைகர் என அழைக்கப்படும் இந்த நாய்.

இரண்டு வருடங்களுக்கு முன்பாகக் குட்டி நாயாக இந்த ரயில் நிலையத்திற்கு வந்த நாய்க்கு உணவளித்த ரயில்வே போலீசாருக்கு நன்றிக்கடன் வழங்கும் வகையில் அவர்களுக்கு உதவியாகவும், உறுதுணையாகவும் செயல்பட்டு வருகிறது.

தினந்தோறும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் ரயில்வே போலீசாருடன் செல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் இந்த டைகர், பகல் நேரத்தில் ஓய்வெடுக்கக் காவல்நிலையத்தையே பயன்படுத்தி வருகிறது.

ரயில் நிலையத்தில் புறப்படும் ரயில்களில் கவனக்குறைவாகப் பயணிகள் யாரேனும் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தால் அவர்களைக் கடிப்பது போல குரைத்து அவர்களே உள்ளே அனுப்பும் பணியையும் டைகர்ச் செய்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாகத் தங்க சங்கிலி பறிப்பு தொடர்புடைய ஒருவரை ரயில்வே போலீசார் விசாரித்துக் கொண்டிருக்கும் போது, தப்பிக்க முயன்ற திருடனைத் துரத்தி பிடித்ததும் இதே டைகர் நாய்தான் என்பதும் தெரியவந்துள்ளது.

சென்னை மாநகர் முழுவதும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை விரட்டி விரட்டி பிடிக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகம், டைகரை மட்டும் பிடிப்பதில்லை. ரயில் பயணிகளுக்குப் பாதுகாவலான, ரயில்வே போலீசாருக்கு உற்ற நண்பனாகப் பணியாற்றி வரும் டைகர் நாய் அனைவரின் மனதையும் கவர்ந்து வருகிறது.

Tags: "Tiger" is the protector of train passengers: a friend to the policeரயில் பயணிகளின் பாதுகாவலன்நண்பனாக திகழ்ந்து வரும் "டைகர்"
ShareTweetSendShare
Previous Post

விண்வெளியில் வீரர்கள் சந்திக்கும் சவால்கள் : நொறுங்கும் எலும்புகள் – கதிர்வீச்சு!

Next Post

மொத்த பாகிஸ்தானும் க்ளோஸ் : 8000 கி.மீ பாயும் K-6 பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்கும் இந்தியா!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies