தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு முதல் ராமரின் ஆட்சி நடைபெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் வைகுண்டபுரம் ஶ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து இந்து சமய மாநாடு நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநாட்டில் பேசிய நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டில் 2026க்கு பிறகு ராமனின் ஆட்சி நடைபெறும் என்றும், அப்போது ஸ்டாலின் முதலமைச்சராக இருக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டார்.
இதனிடையே மாநாட்டில் உரையாற்றிய பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, எதிர்கால சந்ததியினர் நலனுக்காக சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.