ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தண்டவாளம் உடைந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரக்கோணத்தில் இருந்து புறப்பட்ட மின்சார ரயில் சித்தேரி ரயில் நிலையம் அருகில் செல்லும் போது, வழக்கத்திற்கு மாறாக சத்தம் கேட்டது. இதையடுத்து சுதாரித்து கொண்ட ஓட்டுநர், ரயிலை நிறுத்தினார். இதையடுத்து, அவர் சித்தேரி ரயில் நிலையம் மேலாளர், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற பணியாளர்கள் தண்டவாளம் துண்டானதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த ரயிலை பின்தொடர்ந்து வந்த மற்ற ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அதேபோல், சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லும், விரைவு ரயிலும் நிறுத்தப்பட்டது. இதனால், பயணியர் கடும் அவதிப்பட்டனர்.