கர்நாடகாவில் தங்க செயின் என நினைத்து மர்ம நபர்கள், தலைமை காவலரின் மனைவியிடம் கவரிங் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது
கோலார் மாவட்டம் முள்பாகில் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்த இருவர், சமயம் பார்த்து பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறித்து சென்றனர்.
இதுதொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால், திருடப்பட்ட செயின் கவரிங் என்றும், அந்த பெண் நங்கலி காவல் நிலையத்தின் தலைமை காவலரின் மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.