விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோயிலுக்கு இயந்திர யானை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
சுமார் 3 மீட்டர் உயரம், 800 கிலோ எடை கொண்ட இந்த இயந்திர யானை பார்ப்பதற்கு நிஜ யானையை போல் இருப்பதால் பக்தர்கள் அதனை வியப்புடன் பார்த்தனர்.
தனியார் அமைப்பும், நடிகை திரிஷாவும் இணைந்து இந்த இயந்திர யானையை கோயிலுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். கோயிலில் யானைகளை பராமரிப்பதில் இருக்கும் சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.