நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால், ஆழியாறு அணை நீர்மட்டம் 110 அடியை எட்டியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை அமைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 161 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தொடர்ந்து நீர்வரத்தை பொறுத்தே கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.