தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஜூலை மாதம் முதல் வாட்டர் பெல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில், அடுத்த வாரம் முதல் வாட்டர் பெல் திட்டம் நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வகுப்புச் சூழல் பாதிக்கப்படாத வகையில், வகுப்பறையிலேயே மாணவர்கள் தண்ணீர் குடிக்க 2 முதல் 3 நிமிடங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு காலை 11 மணிக்கும், பகல் 1 மணிக்கும், பிற்பகல் 3 மணிக்கும் மூன்று முறை வாட்டர் பெல் அடிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மாணவர்களின் உடலில் ஏற்படும் நீர்சத்துக் குறைபாடு கற்றல் திறனை பாதிக்கும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.