பெங்களூருவின் பரப்பன அக்ரஹார பகுதியில் 13-வது மாடியில் இருந்து இருந்து ரீல்ஸ் எடுக்க முயன்ற பெண் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டடத்தின் 13-வது மாடியில் லிப்ட் அமைப்பதற்காக விடப்பட்டிருந்த பகுதியில் இருந்து ரீல்ஸ் எடுப்பதற்காக அந்த பெண் முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்த பெண், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.