சென்னையில், இடது கண்ணிற்கு பதில் வலது கண்ணில் தவறாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், கண் அறுவை சிகிச்சைக்காக சென்ற போது, இடது கண்ணிற்கு பதில் வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டால் அலட்சியமாக பதிலளிப்பதாக, உரிய நடவடிக்கை எடுக்குமாறும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏழுமலை புகாரளித்துள்ளார்.