வீடுகளை லீசுக்கு விடுவதாகக் கூறி, 7 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாகச் சென்னை ஈசிஆர்ப் பகுதியை சேர்ந்த நிஷா என்ற பெண் மீது 30-க்கும் மேற்பட்டோர் நீலாங்கரைக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சென்னையைச் சேர்ந்த நிஷா நீலாங்கரையில் ‘ஜூன் ஹோம் பிரைவேட் லிமிடெட்’ எனும் பெயரில், தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
மேலும் இவர் வீடு வாடகைக்குப் பிடித்து தரும் தொழிலும் செய்து வந்தார். இவரிடம் வீடு லீசுக்குக் கேட்டு செல்பவர்களிடம், ஏற்கனவே வாடகைக்கு எடுத்த வீட்டைக் காண்பித்து 7 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை ‘லீஸ்’-க்கு விட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 10 மாதங்களாக வீட்டு உரிமையாளர்களின் வங்கி கணக்கில் வாடகைப் பணத்தை நிஷா செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டின் உரிமையாளரிடம் வாடகைப் பணத்தை செலுத்தாத நிலையில், அதன் உரிமையாளர்கள், வீட்டில் தங்கியிருப்பவர்களிடம் வாடகைக் கேட்டு தொந்தரவு அளித்துள்ளனர்.
இதையடுத்துத் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் நிஷா என்பவர் மீது நீலாங்கரைக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.