நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் பகுதியில் குறி கேட்ட நபரைத் தலையில் கத்தியால் குத்திய போலி சாமியார் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் தூதூர்மட்டம் மகாலிங்க காலனியைச் சேர்ந்த நாகராஜ் காய்கறி விவசாயம் செய்து வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார்க் குறி சொல்லும் சாமியாராக உள்ளார். இந்நிலையில் சாமியார் சிவகுமாரும், நாகராஜ்-ம் மது குடித்துள்ளனர்.
அப்போது நாகராஜுக்கு மனநிலைச் சரியில்லை என அக்கம் பக்கத்தினர்ப் பேசுவதாவும், அதற்காகச் சிறப்பு பூஜைச் செய்வதாகவும் கூறிய சிவகுமார் மதுபோதையில் பூஜைச் செய்துள்ளார்.
திருநீறு மற்றும் குங்குமம் ஆகியவற்றை நாகராஜ் மீது வீசி, ஒரு கட்டத்தில் கத்தியை எடுத்துத் தலை மற்றும் நெற்றிப் பகுதியில் குத்தியுள்ளார்.
இதில் வலி தாங்காமல் அலறியடித்து நாகராஜ் வெளியே ஓடிவந்துள்ளார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி சாமியார்ச் சிவகுமாரை கைது செய்தனர்.