கூட்டணிக்குள் குழப்பம் - திக்குமுக்காடும் திமுக!
Aug 17, 2025, 08:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

Web Desk by Web Desk
Jun 30, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுகக் கூட்டணியில் இருக்கும் மதிமுகவையும், விசிகவையும் வெளியேற்றிவிட்டுப் பாமகவை இணைக்கக் காங்கிரஸை பகடைக்காயாகப் பயன்படுத்துவதாக திமுக மீது விமர்சனம் எழத்தொடங்கியுள்ளது. அதிமுக – பாஜக அமைத்திருக்கும் வலுவான கூட்டணியும், கூட்டணிக் கட்சிகள் அளிக்கும் நெருக்கடியும் திமுகவைத் திக்குமுக்காடச் செய்திருக்கிறது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தேசியக் கட்சிகள் தொடங்கி மாநில கட்சிகள் வரை அனைத்துக் கட்சிகளும் தயாராகிவருகின்றன.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி கைகோர்த்திருப்பதன் மூலம் அதிமுகக் கூட்டணி வலுவடைந்திருக்கிறது. அதிமுகத் தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் இணைந்திருக்கும் நிலையில் மேலும் சில கட்சிகளை இணைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் எனக் கடந்த முறைத் தேர்தலை சந்தித்த அதே கூட்டணியோடு தேர்தலைச் சந்திக்க திட்டமிட்டிருந்த திமுகவின் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் எழத்தொடங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம் எனத் தொடங்கி வைத்த உரிமைக்குரல், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மதிமுக வரை விரிவடையத் தொடங்கியிருக்கிறது. கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் தங்களுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த குரல் கொடுப்பது திமுகத் தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு காங்கிரஸ் கட்சி பொதுக்குழுவைக் கூட்டி தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றவும் திட்டமிட்டுள்ளது.

அதிமுக அமைத்திருக்கும் வலுவான கூட்டணியை எதிர்ப்பதோடு, தங்கள் கூட்டணிக்குள்ளாகவே உருவாகியிருக்கும் சலசலப்பைச் சமாளிக்க வேண்டிய கட்டாயமும் திமுகவுக்கு எழுந்துள்ளது.

மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோவுக்கான ராஜ்யசபா உறுப்பினர்ப் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என மதிமுகவினர் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

ஆனால் அந்தப் பதவி மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு அளிக்கப்பட்டதால் மதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. அந்தக் கொந்தளிப்பே, அதிருப்தி இருந்தாலும் கூட்டணியில் தொடர்கிறோம் எனத் துரை வைகோ வெளிப்படையாகவே பேசும் சூழலை ஏற்படுத்தியது. துரைவைகோவின் பேச்சையடுத்து மதிமுகவை உடைக்கும் முயற்சியின் ஒருபகுதியாகவே 2021 ஆம் ஆண்டு பல்லடம் தொகுதியில் மதிமுகச் சார்பாக போட்டியிட்ட முத்துரத்தினம், திருப்பூர் மாவட்ட மதிமுகச் செயலாளர் ரமேஷ், திருப்பூர் மாவட்ட மதிமுக இளைஞரணி செயலாளர் ரவி ஆகியோரைக் கட்சியில் இணைத்தது திமுகத் தலைமை. அதனால், மதிமுகக் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகள் போக 174 தொகுதிகளில் திமுக நேரடியாகக் களமிறங்கியது. இந்தமுறையும் 174 தொகுதிகளுக்குக் குறையாமல் போட்டியிட வேண்டும் என திமுகத் தலைமை நிர்வாகிகள் வலியுறுத்தியிருக்கும் நிலையில் கூட்டணிக் கட்சிகள் கேட்கும் தொகுதிகளைப் பார்க்கும் போது திமுகப் போட்டியிடும் தொகுதிகள் 150க்கும் குறையும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு நெருக்கடி கொடுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாகப் புதிய கட்சிகளைக் கூட்டணிகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளைத் திமுக தொடங்கியுள்ளது. இரட்டை இலக்க எண் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம் என்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும், பெரிய அளவிலான வாக்குவங்கி இல்லாத மதிமுகவையும் கூட்டணியில் இருந்து கழட்டி விட்டுவிட்டு வடமாவட்டங்களில் செல்வாக்கு மிக்கதாகக் கருதப்படும் பாமகவைக் கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன.

பாமகவைக் கூட்டணியில் இணைப்பதற்காகக் காங்கிரஸ் கட்சியைத் திமுகவை பகடைக்காயாகப் பயன்படுத்தி வருவதாகவும் விமர்சனம் எழத் தொடங்கியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவும் தந்தை, மகனுக்கும் இடையிலான உட்கட்சி பூசலைப் பயன்படுத்தி பாமக நிறுவனர் ராமதாசுக்கு கூட்டணியில் இணைய செல்வபெருந்தகையைத் திமுக தூது அனுப்பியிருக்கலாம் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும் மக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மற்றொரு புறம் கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடியும், அதிமுக – பாஜக அமைத்திருக்கும் வலுவான கூட்டணியும் திமுகத் தலைமையை திக்குமுக்காடச் செய்திருக்கிறது.

கட்சித் தலைமை மற்றும் அமைச்சர்கள் மீது தொண்டர்களுக்குக் கடும் அதிருப்தி எழுந்திருக்கும் நிலையில், வாரத்திற்கு ஒருமுறை மடல் எழுதுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது தொண்டர்களை நேரடியாகச் சந்தித்து பேசும் அளவிற்கான பயமும் உருவாகியுள்ளது.

கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடியைச் சமாளிக்க திமுக மேற்கொள்ளும் நடவடிக்கை வருங்காலங்களில் பயனளிக்குமா? எதிர்க்கட்சிகளின் பலத்தைத் திமுகவால் சமாளிக்க முடியுமா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அடுத்தடுத்த நாட்களில் அமையும் தேர்தல் களமே விடையாக அமையும்.

Tags: திக்குமுக்காடும் திமுககூட்டணிதிமுக மீது விமர்சனம்DMKtn bjptn politicsConfusion within the alliance - DMK in disarray
ShareTweetSendShare
Previous Post

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

Next Post

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

Related News

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

அழிவை நோக்கி பயணிக்கும் மனித குலம்…? : எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி முடிவு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

கோவை : இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரம்!

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies