ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் விபத்து ஏற்பட்டால் பயணிகளை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி தத்ரூபமாக நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே துறைச் சார்பில், ரயில் விபத்து ஏற்பட்டால் எவ்வாறு பயணிகளைப் பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்த ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி நெல்லூர் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது போன்றும், அதில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் சிக்கியவர்களை மீட்பது போன்றும் ஒத்திகை நிகழ்வு தத்ரூபமாகச் செய்து காண்பிக்கப்பட்டது.
குறிப்பாக ரயிலினுள் சிக்கியவர்களை எவ்வாறு பத்திரமாக மீட்பது, அவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவி, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது போன்றவை ஒத்திகையாகச் செய்த காண்பிக்கப்பட்டது.
இந்த ஒத்திகை நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்ச் சிவசௌந்தரவல்லி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, ரயில்வே தெற்கு முதல்நிலை அலுவலர்க் கணேஷ், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்புத் துறையினர், ரயில்வே போலீசார் ஆகியோர்க் கலந்து கொண்டனர்.