திருவாரில் அமைக்கப்பட்டுள்ள மீன் முள் வடிவ வாய்க்கால் அமைப்பு மற்றும் அலையாத்தி காடுகளின் பிரத்யேக ட்ரோன் காட்சி வெளியாகி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஆறுகளும், கடலும் சேரும் பகுதியில் 1 லட்சத்து 2020 ஹெக்டேர்ப் பரப்பளவில் அலையாத்தி காடுகள் பரவியுள்ளன.
பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் இப்பகுதியில் கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்துச் சதுப்பு நிலக் காடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இப்பகுதியில் மரங்களைப் பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வரும் வனத்துறை, கடந்த மூன்று ஆண்டுகளாக மீன் முள் வடிவத்தில் வாய்க்கால் அமைப்பு மற்றும் அலையாத்தி காடுகள் மீள் உருவாக்கம் செய்து வருகிறது.
ஆயிரத்து 350 ஹெக்டரில் வாய்க்கால்களின் கரைகளில் 12 லட்சத்துக்கும் அதிகமாக அலையாத்தி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இந்நிலையில் அதன் பிரத்யேக ட்ரோன் காட்சிகளைக் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர்ச் சுப்ரியா சாஹு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த மீன் முள் வடிவ வாய்க்கால் அமைப்பு, மீன்வளர்ப்பை ஊக்குவிப்பதற்காகவும், நீர்ப்பாசனத்தை எளிதாக்குவதற்கும் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.