வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம் என்பது வெறும் சடங்கல்ல, விவசாயிகளின் நிலையை மேம்படுத்துவதற்கான விஞ்ஞானிகளின் ஒருங்கிணைந்த முயற்சி என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் உள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ள வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கத்தின் வெற்றியை மத்திய அமைச்சர்ப் பாராட்டினார்.
மேலும் விவசாயிகளுக்கு உணவு உற்பத்தியின் தரம் மற்றும் அணுகலை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சிவராஜ் சிங் சவுகான் எடுத்துரைத்தார்.