நாடு முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் போஸ்ட் ஆபீசில் UPI மூலம் பணம் செலுத்தலாம் என்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
முன்னதாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்த தபால் நிலையங்களில் QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால் தொடர்ச்சியான தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் புகார்கள் காரணமாக, இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது.
தற்போது நடைமுறைச் சிக்கல்களை நிவர்த்தி செய்து மீண்டும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை நடைமுறைக்கு வரவுள்ளது.