ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சரக்குகளைகையாளும் பிரிவில் ஊழியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ சர்ச்சையான நிலையில், 4 பேர்ப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், 270 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், விபத்துக்கு உள்ளான ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சரக்குகளைக் கையாளும் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள், கொண்டாட்டத்தில் ஈடுபட்டது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோ சர்ச்சையானதை அடுத்து, 4 மூத்த அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்து ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.