கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் அதிவேகமாக வந்த மின்வாரிய துறை வாகனம் மோதி பாதசாரி உயிரிழந்த பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
எர்ணாகுளம் மாவட்டம் கரீம்பாறைப் பகுதியில் இருந்து கோதமங்கலம் நோக்கி கேரள அரசின் மின்வாரியத் துறைக்குச் சொந்தமான எலெக்ட்ரிக் கார் அதிவேகமாகச் சென்றது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையைக் கடந்து சென்ற தங்கப்பன் என்பவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட் அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.