சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர்ச் சுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்திய விண்வெளி வீரர்ச் சுபன்ஷு சுக்லா உட்பட 4 பேர், சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர்.
அங்கு 14 நாட்கள் அவர்கள் ஆய்வு பணியில் ஈடுபடுகின்றனர். சுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி பேசி உள்ளார். அப்போது, அவருடைய உடல் நிலை மற்றும் விண்வெளி அனுபவம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.