மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்று மாலைக்குள் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. கர்நாடகாவின் கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 86 ஆயிரத்து 984 கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 68 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 119 புள்ளி 22 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 92 புள்ள 23 டிஎம்சியாக உள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 26 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில், அணையின் நீர்மட்டம் விரைவில் 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.