குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் யாகசாலை மண்டபம் பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 7ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதற்காக, கோயிலில் பல்வேறு கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ராஜகோபுரம் முன்பு சுமார் 8 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்ட யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
யாகசாலை மண்டபத்தை சுற்றிலும் முருகப்பெருமானின் வரலாற்றை கூறும் வகையில் வர்ணங்கள் தீட்டப்பட்டுள்ள நிலையில், 76 யாகவேள்வி குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 1ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்படவுள்ளதால், யாகசாலை மண்டபம் தங்க நிறத்திலான அட்டைகளால் ஒட்டப்பட்டு ஜொலிக்கின்றன.