திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோயில் தந்திரியிடம் தங்கக் குடம் கொடுத்து அதிகாரம் வழங்கப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா ஜூலை 7ம் தேதி நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு மூலவருக்குக் குடமுழுக்கு நடத்துவதற்கான அதிகாரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
போதி மடத்திலிருந்து கோயில் தந்திரி மேளதாளங்கள் முழங்கக் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டார்.
தொடர்ந்து சண்முக விலாசம் மண்டபத்தில் தங்க குடத்தில் தந்திரிக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் மூலவருக்குக் குடமுழுக்கு நடத்துவதற்கான தங்கக் குடம் வழங்கப்பட்டு கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.