திண்டுக்கல் அருகே வீட்டில் வைத்திருந்த 50 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வடமதுரை அடுத்த சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர் தனது குடும்பத்துடன் கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார்.
தொடர்ந்து வீட்டிற்குத் திரும்பி வந்த பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 50 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடப்பட்டிருந்தது.
இதையடுத்து பழனிச்சாமி அளித்த தகவலின் பேரில் வடமதுரை போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் நேரில் சென்று தடங்களைக் கைப்பற்றி கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.