திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 800 தீர்த்த திருக்குடங்களுக்கு வர்ண நூல் சுற்றும் பணி நடைபெற்றது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு முன்னிட்டு ஒன்றாம் தேதி யாகசாலை வேள்வி பூஜைகள் தொடங்கவுள்ளன. 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் 76 வேள்வி குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வேள்வி குண்டங்களில் வைக்கப்பட உள்ள 800 தீர்த்த திருக்குடங்களுக்கு வர்ண நூல் சுற்றும் பணி நடைபெற்றது.
பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் ஸ்தல அர்ச்சகர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.