தொழில்துறை வளர்ச்சியில் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், திமுக அரசின் செயலற்ற தன்மையால் தமிழகத்தில் ஆட்டோமொபைல், மின்னணுவியல், ஜவுளி மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறைகள் ஆபத்தான நிலையைச் சந்தித்துள்ளதாகக் கூறினார்.
2023-24ம் ஆண்டில் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்துறை முதலீடுகளை ஈர்த்ததாக முதலமைச்சர் அறிவித்ததாகவும், ஆனால், கால் பங்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மீதமுள்ளவை வெறும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் அறிவிப்புகளாகவே உள்ளன எனவும் குறிப்பிட்டார்.
திமுக அரசின் செயலற்ற தன்மையால் தமிழகத்தில் உள்ள தொழில்முனைவோர், இளைஞர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்றும், தமிழகத்தின் தொழில்துறை தடுமாறி வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்