தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!
Nov 16, 2025, 11:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

Web Desk by Web Desk
Jun 30, 2025, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடிநீரில் தொடங்கி சாலை வரை எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தினால் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

திண்டுக்கல் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் கொடைக்கானலுக்கு அருகே அமைந்திருக்கும் வில்பட்டி ஊராட்சி 10க்கும் அதிகமான கிராமங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய ஊராட்சியாகச் செயல்பட்டு வருகிறது.

பள்ளங்கி, குறிஞ்சி நகர், பெரும்பள்ளம், சின்னப்பள்ளம் என இயற்கை எழில் மிகுந்த சூழல் கொண்ட கிராமங்களை உள்ளடக்கிய வில்பட்டி ஊராட்சியில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. அத்தகைய சிறப்புமிக்க வில்பட்டி ஊராட்சிக்கு செல்லும் சாலையோ, பயணிக்கவே முடியாத அளவிற்குக் குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கின்றன

கடந்த இரு வருடங்களுக்கு முன்பாக போடப்பட்ட சாலை ஒரு மாதம் கூட தாங்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பள்ளிக் குழந்தைகள் தொடங்கி விவசாயம் செய்யப்படும் காய்கறிகளை ஏற்றிச் செல்லும் வானங்கள் வரை நாள்தோறும் நூற்றுக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பது விபத்து ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

வில்பட்டி ஊராட்சியின் அவலநிலைக்குச் சாலை வசதியின்மை ஒரு காரணம் என்றால் குப்பைத் தொட்டிகள் மற்றொரு காரணமாக அமைந்திருக்கின்றன. குப்பைத் தொட்டிகள் இல்லாத காரணத்தினால் ஊராட்சிக்குச் சொந்தமான குப்பைகள் அனைத்தும் சாலைகளில் கொட்டப்பட்டுள்ளன. நீண்டநாட்களாக அகற்றப்படாமல் இருக்கும் குப்பைகளிலிருந்து  துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு நிலவும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

குண்டும் குழியுமான சாலைகள், மலைபோல குவிந்திருக்கும் குப்பைகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதியின்மை என எந்தவித வசதிகளுமின்றி வில்பட்டி ஊராட்சி தனித்தீவு போல காட்சியளிக்கிறது. வில்பட்டி ஊராட்சியில் வசிக்கும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அங்கு தேவைப்படக்கூடிய அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும்  ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை  எழுந்துள்ளது.

Tags: திண்டுக்கல் மாவட்டம்The plight of being an isolated island: People suffering without basic amenitiesஅடிப்படை வசதி இன்றி தவிக்கும் மக்கள்மேற்கு தொடர்ச்சி
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள் : நயினார் நாகேந்திரன்

Next Post

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

Related News

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies