தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!
Jun 30, 2025, 07:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

Web Desk by Web Desk
Jun 30, 2025, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடிநீரில் தொடங்கி சாலை வரை எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தினால் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

திண்டுக்கல் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் கொடைக்கானலுக்கு அருகே அமைந்திருக்கும் வில்பட்டி ஊராட்சி 10க்கும் அதிகமான கிராமங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய ஊராட்சியாகச் செயல்பட்டு வருகிறது.

பள்ளங்கி, குறிஞ்சி நகர், பெரும்பள்ளம், சின்னப்பள்ளம் என இயற்கை எழில் மிகுந்த சூழல் கொண்ட கிராமங்களை உள்ளடக்கிய வில்பட்டி ஊராட்சியில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. அத்தகைய சிறப்புமிக்க வில்பட்டி ஊராட்சிக்கு செல்லும் சாலையோ, பயணிக்கவே முடியாத அளவிற்குக் குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கின்றன

கடந்த இரு வருடங்களுக்கு முன்பாக போடப்பட்ட சாலை ஒரு மாதம் கூட தாங்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பள்ளிக் குழந்தைகள் தொடங்கி விவசாயம் செய்யப்படும் காய்கறிகளை ஏற்றிச் செல்லும் வானங்கள் வரை நாள்தோறும் நூற்றுக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பது விபத்து ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

வில்பட்டி ஊராட்சியின் அவலநிலைக்குச் சாலை வசதியின்மை ஒரு காரணம் என்றால் குப்பைத் தொட்டிகள் மற்றொரு காரணமாக அமைந்திருக்கின்றன. குப்பைத் தொட்டிகள் இல்லாத காரணத்தினால் ஊராட்சிக்குச் சொந்தமான குப்பைகள் அனைத்தும் சாலைகளில் கொட்டப்பட்டுள்ளன. நீண்டநாட்களாக அகற்றப்படாமல் இருக்கும் குப்பைகளிலிருந்து  துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு நிலவும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

குண்டும் குழியுமான சாலைகள், மலைபோல குவிந்திருக்கும் குப்பைகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதியின்மை என எந்தவித வசதிகளுமின்றி வில்பட்டி ஊராட்சி தனித்தீவு போல காட்சியளிக்கிறது. வில்பட்டி ஊராட்சியில் வசிக்கும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அங்கு தேவைப்படக்கூடிய அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும்  ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை  எழுந்துள்ளது.

Tags: திண்டுக்கல் மாவட்டம்The plight of being an isolated island: People suffering without basic amenitiesஅடிப்படை வசதி இன்றி தவிக்கும் மக்கள்மேற்கு தொடர்ச்சி
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள் : நயினார் நாகேந்திரன்

Next Post

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

Related News

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள் : நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் தொழில்துறை தடுமாறுகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடை வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : எல்.முருகன் பெருமிதம்!

ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் – உச்சநீதிமன்றம்

உயிரிழந்த அஜித் குமார் உடலில் 18 இடங்களில் காயம் இருந்தது கண்டுபிடிப்பு!

பழனி அருகே தொடர்ந்து கடத்தப்படும் கனிம வளங்கள் – சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

ரூ.30 கோடிக்கும் மேல் வசூலித்த கண்ணப்பா படம்!

சங்கர நாராயணசாமி கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை மீட்டு முறையாக பராமரிக்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

மேலூரில் மாமூல் கேட்டுக் கடை உரிமையாளர்கள் மீது தாக்குதல் : வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்!

கேப்டனாக டி-20யில் அதிக சதங்கள் அடித்து டூ பிளெஸ்ஸிஸ் சாதனை!

உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆறுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies