தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!
Jan 14, 2026, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Jun 30, 2025, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடிநீரில் தொடங்கி சாலை வரை எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தினால் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

திண்டுக்கல் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் கொடைக்கானலுக்கு அருகே அமைந்திருக்கும் வில்பட்டி ஊராட்சி 10க்கும் அதிகமான கிராமங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய ஊராட்சியாகச் செயல்பட்டு வருகிறது.

பள்ளங்கி, குறிஞ்சி நகர், பெரும்பள்ளம், சின்னப்பள்ளம் என இயற்கை எழில் மிகுந்த சூழல் கொண்ட கிராமங்களை உள்ளடக்கிய வில்பட்டி ஊராட்சியில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. அத்தகைய சிறப்புமிக்க வில்பட்டி ஊராட்சிக்கு செல்லும் சாலையோ, பயணிக்கவே முடியாத அளவிற்குக் குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கின்றன

கடந்த இரு வருடங்களுக்கு முன்பாக போடப்பட்ட சாலை ஒரு மாதம் கூட தாங்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பள்ளிக் குழந்தைகள் தொடங்கி விவசாயம் செய்யப்படும் காய்கறிகளை ஏற்றிச் செல்லும் வானங்கள் வரை நாள்தோறும் நூற்றுக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பது விபத்து ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

வில்பட்டி ஊராட்சியின் அவலநிலைக்குச் சாலை வசதியின்மை ஒரு காரணம் என்றால் குப்பைத் தொட்டிகள் மற்றொரு காரணமாக அமைந்திருக்கின்றன. குப்பைத் தொட்டிகள் இல்லாத காரணத்தினால் ஊராட்சிக்குச் சொந்தமான குப்பைகள் அனைத்தும் சாலைகளில் கொட்டப்பட்டுள்ளன. நீண்டநாட்களாக அகற்றப்படாமல் இருக்கும் குப்பைகளிலிருந்து  துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு நிலவும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

குண்டும் குழியுமான சாலைகள், மலைபோல குவிந்திருக்கும் குப்பைகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதியின்மை என எந்தவித வசதிகளுமின்றி வில்பட்டி ஊராட்சி தனித்தீவு போல காட்சியளிக்கிறது. வில்பட்டி ஊராட்சியில் வசிக்கும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அங்கு தேவைப்படக்கூடிய அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும்  ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை  எழுந்துள்ளது.

Tags: திண்டுக்கல் மாவட்டம்The plight of being an isolated island: People suffering without basic amenitiesஅடிப்படை வசதி இன்றி தவிக்கும் மக்கள்மேற்கு தொடர்ச்சி
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள் : நயினார் நாகேந்திரன்

Next Post

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

Related News

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies