செய்யாறு அருகே போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைக்க அனுமதி மறுத்த நகராட்சி ஆணையருக்கு தமுமுகவினர் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாடு வரும் 6ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது.
அதற்காக திருவத்திபுரம் நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் பகுதியில் 80 அடி நீள பிளக்ஸ் பேனரை சாலையின் அருகே வைக்க நிாவாகிகள் முயன்றனர்.
ஆனால், பெரிய பேனர்களை வைக்கக்கூடாது என்று நீதிமன்ற ஆணை உள்ளதைச் சுட்டிக்காட்டி, பேனரை வைக்க நகராட்சி ஆணையர் கீதா மறுப்பு தெரிவித்தார்.
இதனால், ஆத்திரமடைந்த தமுமுகவினர் ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்தனர். மேலும், ஆணையரின் எதிர்ப்பையும் மீறி பேனர் வைத்தனர்.