ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது.
பூஞ்ச்-ரஜோரியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.
இந்த முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. மேலும் ஊடுருவலுக்கு உதவ முயன்ற வழிகாட்டியையும் இந்திய ராணுவத்தினர் கைது செய்தனர்.