குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்திய மாலுமிகள் 14 பேர் உள்ளிட்ட கப்பல் பணியாளர்களுடன், குஜராத் மாநிலம் காண்ட்லாவிலிருந்து ஓமன் நோக்கி கப்பல் சென்று கொண்டிருந்தது.
தொடர்ந்து கப்பலின் இயந்திர அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்குச் சென்ற இந்தியக் கடற்படை வீரர்கள் உரிய நேரத்தில் தீயைக் கட்டுப்படுத்தினர்.
மேலும் 14 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட கப்பல் பணியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.