சென்னை தாம்பரத்தில் ஓசியில் சிக்கன் பிரியாணி வாங்கியதுடன் கத்தியைக் காட்டி மிரட்டி மாமூல் வசூலித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம் காந்தி சாலையில் மஸ்தான் பாய் என்பவர் தள்ளுவண்டி பிரியாணிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த இருவர், ஓசியில் பிரியாணி வாங்கியுள்ளனர்.
மேலும், கத்தியைக் காட்டி மிரட்டி கல்லாவில் இருந்த 700 ரூபாயை மாமூலாக வசூலித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கடப்பேரியைச் சேர்ந்த விஜய் மற்றும் மதன் ஆகிய இருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.