மதுரை கைத்தறி நகரில் டாஸ்மாக் கடை திறக்க தடைகோரிய வழக்கில் அரசு தரப்பில் எழுத்துப் பூர்வமாகப் பதில் மனுத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டாஸ்மாக் கடைக்குத் தடைகோரிய வழக்கானது நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தரப்புக்குச் சரமாரி கேள்விகள் எழுப்பப்பட்டன.
ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டு, மறுபக்கம் போதை மறுவாழ்வு மையங்களை அரசு அமைப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஊழல் போன்ற பல பிரச்சனைகளுக்கு மதுவே காரணமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
மதுக்கடைகளை மூடுவதாகக் கூறுகிறார்களே தவிர அதனைச் செயல்படுத்துவதில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமாகப் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.