8 நாட்கள், 5 நாடுகள் - வெளிநாடு புறப்பட்டார் பிரதமர் மோடி!
Mar 15, 2026, 09:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

8 நாட்கள், 5 நாடுகள் – வெளிநாடு புறப்பட்டார் பிரதமர் மோடி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 2, 2025, 10:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி 8 நாட்கள் பயணமாக கானா உள்ளிட்ட நாடுகளுக்கு புறப்பட்டு சென்றார்.

ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரு கண்டங்களில் உள்ள கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, நமீபியா, அர்ஜெண்டினா மற்றும் பிரேசில் ஆகிய 5 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி இன்றும் நாளையும் ஆப்ரிக்க நாடான கானாவில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன் மூலம் முதல் முறையாக கானா செல்லும் பிரதமர் மோடி, கடந்த 30 ஆண்டுகளில் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார்.

பின்னர் நாளை மாலை அங்கிருந்து டிரினிடாட் அண்டு டுபாகோவிற்கு செல்லும் பிரதமர் மோடி, நாளை மறுதினம் அங்குள்ள நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஜூலை 4 மற்றும் 5-ம் தேதிகளில் தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவிலும், ஜூலை 5 முதல் 8-ம் தேதி வரை பிரேசில் நாட்டிலும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

பிரேசில் அதிபர் லுலா டா சில்வா அழைப்பை ஏற்று அங்கு செல்லவுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டில் நடைபெறவுள்ள 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் கலந்துகொள்ள உள்ளார்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அமைதி, பாதுகாப்பு, பன்முகத்தன்மையுடன் உறவை வலுப்படுத்துதல், பொறுப்பான ஏ.ஐ தொழில்நுட்ப பயன்பாடு, உலகளாவிய சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் நிதி சார்ந்த விவகாரங்களில் இந்தியாவின் பார்வைகளை அவர் பகிர்ந்துகொள்ள உள்ளார்.

உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பல்வேறு இருதரப்பு கூட்டங்களையும் அவர் நடத்தவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜூலை 8-ம் தேதி பிரேசிலில் இருந்து தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவிற்கு செல்லும் பிரதமர் மோடி. 9-ம் தேதி அந்நாட்டு அதிபர் நந்தி தைத்வாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.

Tags: 8-day tripBrazilprime minister modiNamibiaArgentinaGhanaTrinidadTobago
ShareTweetSendShare
Previous Post

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்!

Next Post

பொன்னேரி அருகே திருமணமான 4 நாட்களில் வரதட்சணை கொடுமையால் புதுமணப்பெண் தற்கொலை – கணவர், மாமியார் கைது!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies