உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!
Jan 14, 2026, 10:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

Murugesan M by Murugesan M
Jul 4, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏற்றுமதி அதிகரித்து வருவதால் இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தி 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும் இந்தியாவில் ஏற்றுமதிகள்  அதிகரித்துள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2007 ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகு, கடந்த 11 ஆண்டுகளில்,உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறி உள்ளது. இன்னும் ஓராண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

உலகளாவிய உற்பத்தி சக்தி மையமாக இந்தியா வேகமாக எழுச்சி பெற்று வருகிறது. அதிகமான மக்கள் தொகை, திறமையான பணியாளர்கள் மற்றும் சாதகமான வணிகச் சூழல் ஆகியவற்றுடன், இந்தியத் தொழிற்சாலைகள் உலகளவில் உற்பத்தித் தொழில்களுக்கு ஏற்ற இடமாக மாறியுள்ளன.

இந்தியாவில் உற்பத்தி மையங்களாகக் குஜராத்,மகாராஷ்டிரா தமிழ்நாடு.கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில்,  பல முக்கிய தொழில்துறை மண்டலங்கள் மட்டுமல்லாமல் சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் இயங்கி வருகின்றன.

வலுவான ஏற்றுமதி தேவை மற்றும் உற்பத்தி அதிகரிப்பு ஆகியவற்றால், நாட்டின் தொழில்துறை   நிறுவனங்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.  S&P Global கணக்கிட்ட HSBC  இந்தியா உற்பத்தி கொள்முதல் மேலாளர்கள் குறியீடு (PMI ), மார்ச் மாதத்தில் 58.1 ஆக இருந்தது. தற்போது 58.2 ஆக உயர்ந்துள்ளது. பொதுவாக, 50 புள்ளிகளுக்கு மேல் PMI இருந்தால் உற்பத்தி நடவடிக்கையில் வளர்ச்சி ஏற்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகு,இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தி, வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. கணக்கெடுக்கப்பட்ட துறைகளில் நுகர்வோர் பொருட்கள் முன்னணியில் உள்ளன. சர்வதேச தேவை காரணமாகவே  கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு ஏற்றுமதிக்குப் புதிய ஆர்டர்களும் அதிகரித்துள்ளன.

இது 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு, மூன்றாவது மிக உயர்ந்த வளர்ச்சி விகிதம் ஆகும்.  மேலும்,14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இரண்டாவது மிக உயர்ந்த வளர்ச்சி விகிதமாகும். ஜனவரி மாதத்துக்குப் பிறகு, பல்வேறு சந்தைகளில் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு அதிக விற்பனையை இந்திய உற்பத்தியாளர்கள் செய்துள்ளனர். குறிப்பாக, அமெரிக்கச் சந்தைகள் முக்கிய பங்களிப்பை வழங்கியிருக்கின்றன.

ஏற்றுமதி தேவைகள் அதிகரித்த காரணத்தால், முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் கூடுதல் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. உற்பத்தி செலவுகள் அதிகரித்த அதே வேளையில், விற்பனை விலைகளும் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. பணவீக்கம் மிதமாக இருந்த போதிலும்,விலை நிர்ணய ஏற்றம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

அடுத்த 12 மாதங்களில் தொழில் துறை உற்பத்தி மேலும் உயரும் என்று எதிர்பார்ப்பதாக 30 சதவீத உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Exports hit record high: India is a global manufacturing hubஉற்பத்தி மையமாகும் இந்தியாஉச்சம் தொட்ட ஏற்றுமதிதொழிற்சாலை
ShareTweetSendShare
Previous Post

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

Next Post

அஜித் குமார் கொலை வழக்கு – தாயார், சகோதரரிடம் நீதிபதி விசாரணை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies