நஞ்சான நிலத்தடி நீர் : 30 ஆண்டுகளாக அகற்றப்படாத குரோமிய கழிவுகள்!
Jul 3, 2025, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நஞ்சான நிலத்தடி நீர் : 30 ஆண்டுகளாக அகற்றப்படாத குரோமிய கழிவுகள்!

Web Desk by Web Desk
Jul 3, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராணிப்பேட்டை அருகே கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக மூடப்பட்ட தொழிற்சாலையில் இருக்கும் குரோமியக் கழிவுகள் நிலத்தடி நீரை நச்சுத்தன்மை மிக்கதாக மாற்றியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. ராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் சிறுநீரகம், நுரையீரல், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை உண்டாக்கும் குரோமியக் கழிவு குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு குரோமேட்ஸ் கெமிக்கல் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் குரோமியம், சல்பேட், சோடியம், டைகுரோமேட், சோடியம் போன்ற ரசாயன உற்பத்தி செய்யப்பட்டுத் தோல் தொழிற்சாலைகளுக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

நிதிநிலை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்ட தொழிற்சாலை வளாகத்தில் இருந்த 2.50 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் தற்போதுவரை அகற்றப்படாமல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.  அக்கழிவுகள் சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவிற்குப் பரவி நிலத்தடி நீரை நச்சுத்தன்மை மிக்கதாக மாற்றி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

ஆழ்துணை கிணறுகளில் பெறப்படும் நிலத்தடி நீர் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், விவசாயமும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீரில் தொடங்கி தென்னை மரத்தில் விளையும் இளநீர் வரை நச்சுத்தன்மை மிக்கதாக இருப்பதால் சுவாசக்கோளாறு, சிறுநீரகப் பிரச்சனை மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை என அப்பகுதி மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொழிற்சாலை மூடப்பட்டு 30 ஆண்டுகள் கடந்தும் அங்கிருக்கும் கழிவுகளை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காத ஆட்சியாளர்கள் மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

இது தொடர்பாக மாசுக்கட்டுவாரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட போது குரோமியக் கழிவுகளை அகற்ற முதற்கட்டமாக 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் அப்பணிகள் தொடங்கும் எனவும் தெரிவித்தனர்.

Tags: நஞ்சான நிலத்தடி நீர்Poisoned groundwater: Chromium waste that has not been removed for 30 yearsகுரோமிய கழிவுகள்
ShareTweetSendShare
Previous Post

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

Next Post

அரசு முறை பயணமாக கானா சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

Related News

விருதுநகர் மாவட்டத்தில் 1052 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்காவுக்கு ஒப்புதல் – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

ரிதன்யா தற்கொலை விவகாரம் – தாய் உண்ணாவிரதம்!

நெல்லையில் சீருடை அணியாத காவலர்களால் தாக்கப்பட்ட சிறுவன் – பாஜக எம்எல்ஏ நேரில் ஆறுதல்!

சென்னையில் மழைநீர் வடிகாலில் தீக்காயங்களுடன் விழுந்து கிடந்த இருவர் மீட்பு – வியாபாரிக்கு குவியும் பாராட்டு!

உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்த தவெக தலைவர் விஜய், டாக்டர் கிருஷ்ணசாமி!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் கூடுதல் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் – எஸ்பி மிரட்டடியதாக குற்றச்சாட்டு!

2000 கோடி மதிப்பிலான நேஷனல் ஹெரால்டு பங்குகளை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய சோனியா, ராகுல் – அமலாக்கத்துறை வாதம்!

இந்தியா, கானா இடையே சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும் – பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

அரசு முறை பயணமாக கானா சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

நஞ்சான நிலத்தடி நீர் : 30 ஆண்டுகளாக அகற்றப்படாத குரோமிய கழிவுகள்!

இந்தியாவின் ஆகாஷ்தீர் : புத்திசாலி அசுரன்- வாங்க துடிக்கும் பிரேசில்!

சுயசார்பு பாரதத்தின் அடையாளம் : ரேடாரில் சிக்காத INS உதயகிரி கடற்படையில் இணைப்பு!

தமிழரின் புதிய முயற்சி : உருவாகும் புதிய Network தேசம் – உருமாறும் உலக வரைபடம்?

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies