நஞ்சான நிலத்தடி நீர் : 30 ஆண்டுகளாக அகற்றப்படாத குரோமிய கழிவுகள்!
Jun 15, 2026, 09:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நஞ்சான நிலத்தடி நீர் : 30 ஆண்டுகளாக அகற்றப்படாத குரோமிய கழிவுகள்!

Murugesan M by Murugesan M
Jul 3, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராணிப்பேட்டை அருகே கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக மூடப்பட்ட தொழிற்சாலையில் இருக்கும் குரோமியக் கழிவுகள் நிலத்தடி நீரை நச்சுத்தன்மை மிக்கதாக மாற்றியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. ராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் சிறுநீரகம், நுரையீரல், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை உண்டாக்கும் குரோமியக் கழிவு குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு குரோமேட்ஸ் கெமிக்கல் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் குரோமியம், சல்பேட், சோடியம், டைகுரோமேட், சோடியம் போன்ற ரசாயன உற்பத்தி செய்யப்பட்டுத் தோல் தொழிற்சாலைகளுக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

நிதிநிலை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்ட தொழிற்சாலை வளாகத்தில் இருந்த 2.50 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் தற்போதுவரை அகற்றப்படாமல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.  அக்கழிவுகள் சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவிற்குப் பரவி நிலத்தடி நீரை நச்சுத்தன்மை மிக்கதாக மாற்றி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

ஆழ்துணை கிணறுகளில் பெறப்படும் நிலத்தடி நீர் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், விவசாயமும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீரில் தொடங்கி தென்னை மரத்தில் விளையும் இளநீர் வரை நச்சுத்தன்மை மிக்கதாக இருப்பதால் சுவாசக்கோளாறு, சிறுநீரகப் பிரச்சனை மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை என அப்பகுதி மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொழிற்சாலை மூடப்பட்டு 30 ஆண்டுகள் கடந்தும் அங்கிருக்கும் கழிவுகளை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காத ஆட்சியாளர்கள் மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

இது தொடர்பாக மாசுக்கட்டுவாரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட போது குரோமியக் கழிவுகளை அகற்ற முதற்கட்டமாக 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் அப்பணிகள் தொடங்கும் எனவும் தெரிவித்தனர்.

Tags: Poisoned groundwater: Chromium waste that has not been removed for 30 yearsகுரோமிய கழிவுகள்நஞ்சான நிலத்தடி நீர்
ShareTweetSendShare
Previous Post

சுயசார்பு பாரதத்தின் அடையாளம் : ரேடாரில் சிக்காத INS உதயகிரி கடற்படையில் இணைப்பு!

Next Post

அரசு முறை பயணமாக கானா சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

Related News

3வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; நயினார் நேரில் ஆறுதல்

சபரிமலையில் சாமி தரிசனம் செய்த அன்புமணி தம்பதி

தவெக எம்.எல்.ஏவுக்காக காத்திருந்த மூத்த தலைவர்; இவருக்கு இந்த கதியா ?

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies