நஞ்சான நிலத்தடி நீர் : 30 ஆண்டுகளாக அகற்றப்படாத குரோமிய கழிவுகள்!
May 1, 2026, 12:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நஞ்சான நிலத்தடி நீர் : 30 ஆண்டுகளாக அகற்றப்படாத குரோமிய கழிவுகள்!

Murugesan M by Murugesan M
Jul 3, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராணிப்பேட்டை அருகே கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக மூடப்பட்ட தொழிற்சாலையில் இருக்கும் குரோமியக் கழிவுகள் நிலத்தடி நீரை நச்சுத்தன்மை மிக்கதாக மாற்றியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. ராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் சிறுநீரகம், நுரையீரல், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை உண்டாக்கும் குரோமியக் கழிவு குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு குரோமேட்ஸ் கெமிக்கல் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் குரோமியம், சல்பேட், சோடியம், டைகுரோமேட், சோடியம் போன்ற ரசாயன உற்பத்தி செய்யப்பட்டுத் தோல் தொழிற்சாலைகளுக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

நிதிநிலை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்ட தொழிற்சாலை வளாகத்தில் இருந்த 2.50 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் தற்போதுவரை அகற்றப்படாமல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.  அக்கழிவுகள் சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவிற்குப் பரவி நிலத்தடி நீரை நச்சுத்தன்மை மிக்கதாக மாற்றி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

ஆழ்துணை கிணறுகளில் பெறப்படும் நிலத்தடி நீர் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், விவசாயமும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீரில் தொடங்கி தென்னை மரத்தில் விளையும் இளநீர் வரை நச்சுத்தன்மை மிக்கதாக இருப்பதால் சுவாசக்கோளாறு, சிறுநீரகப் பிரச்சனை மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை என அப்பகுதி மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொழிற்சாலை மூடப்பட்டு 30 ஆண்டுகள் கடந்தும் அங்கிருக்கும் கழிவுகளை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காத ஆட்சியாளர்கள் மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

இது தொடர்பாக மாசுக்கட்டுவாரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட போது குரோமியக் கழிவுகளை அகற்ற முதற்கட்டமாக 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் அப்பணிகள் தொடங்கும் எனவும் தெரிவித்தனர்.

Tags: Poisoned groundwater: Chromium waste that has not been removed for 30 yearsகுரோமிய கழிவுகள்நஞ்சான நிலத்தடி நீர்
ShareTweetSendShare
Previous Post

சுயசார்பு பாரதத்தின் அடையாளம் : ரேடாரில் சிக்காத INS உதயகிரி கடற்படையில் இணைப்பு!

Next Post

அரசு முறை பயணமாக கானா சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

Related News

குன்றக்குடி அடிகளாரின் 31-வது குருபூஜை விழா கோலாகலம்!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 993 உயர்வு – சென்னையில் 3237 ரூபாய்க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சித்ரா பௌர்ணமி கோலாகலம் – திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்!

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராக பால் கனகராஜ் தேர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை!

திமுக அரசு மீதான மக்களின் கோபம் தேர்தல் முடிவுகளில் வெளிப்படும் – எல்.முருகன் உறுதி!

அனைத்து கருத்து கணிப்புகளையும் உடைத்து அதிமுக ஆட்சி அமைக்கும் – எடப்பாடி பழனிசாமி

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை – பியூஸ் கோயல்

சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் அர்சனா பட்நாயக் ஆலோசனை!

எங்கும் தாமரை மலர்வதை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது – ஷெசாத் பூனாவாலா

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு புதிய விதிமுறை – நாளை முதல் அமல்!

பெங்களூரு அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies