சிகரெட் சூடு, 44 காயங்கள், மூளையில் ரத்த கசிவு - அஜித் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்!
Jan 14, 2026, 11:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிகரெட் சூடு, 44 காயங்கள், மூளையில் ரத்த கசிவு – அஜித் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 4, 2025, 09:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீசார் கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்தது பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது.

அந்த அறிக்கையின் அடிப்படையில், அஜித்குமாரின் உடலில் உள்ளே, வெளியே என 60-க்கும் மேற்பட்ட காயங்களும், மிளகாய் பொடியை செலுத்தியதற்கான தடயங்களும் இருப்பதை அறிய முடிகிறது.

சுமார் 44 இடங்களில் வெளிப்புற காயங்கள் இருப்பதாகவும், அதில் 12 காயங்கள் சிராய்ப்பு காயங்கள் என்றும், மீதமுள்ளவை அனைத்தும் ரத்தக் கட்டு காயங்கள் என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காயங்கள் ஒவ்வொன்றும் பல தாக்கங்களை உள்ளடக்கியதை காட்டுவதாகவும், ஒரே இடத்தில் மீண்டும், மீண்டும் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதையும் காட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காயங்கள் பல்வேறு கோணங்களில் உள்ளதால், பலர் சேர்ந்து பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கியிருக்க வாய்ப்பு உள்ளதை அறிக்கையின் மூலம் அறிய முடிகிறது.

இரும்பு, பிளாஸ்டிக் பைப், ரப்பர் போன்ற ஆயுதங்களால் அஜித்குமாரை தாக்கியிருக்கலாம் என்றும், இது ஒருவரை கட்டி வைத்து, பலபேர் பல இடங்களில் தாக்கியிருப்பதற்கான சாத்தியத்தை காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கபாலத்தில் அடியும், மூளையின் உள்ளே ரத்த கசிவும் உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்தி காயப்படுத்தப்பட்டிருப்பதாகவும், தலையில் கம்பை வைத்து தாக்கியதில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிகரெட் சூட்டால் சித்ரவதை செய்யப்பட்டது பற்றிய தகவலும் மருத்துவ அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

சட்டங்களுக்கு எதிரான இந்த சித்ரவதை தாக்குதல் திட்டமிட்டு, தொடர்ந்து, பல மணி நேரங்கள் நடந்து இருக்கக் கூடியதை காட்டுவதாக பார்க்கப்படுகிறது.

இந்த அளவிலான காயங்கள், ஒரே நேரத்தில் பலர் சேர்ந்து தொடர்ச்சியாக அடிக்கும்போது உருவாகும் காயங்களே என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அஜித்குமார் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சாதாரண மனிதர்களால் தாங்கவே முடியாது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Tags: thirupuvanm police station. Ajith kumar motherajith postmodem reportAjith Kumar murderMadapuramsivaganalockupdeathSivaganga district police
ShareTweetSendShare
Previous Post

விருதுநகர் அருகே கட்டிட வசதி கோரி அரசுப்பள்ளி மாணவர்கள் போராட்டம்!

Next Post

அஜித் கொலையில் ஐஏஎஸ் அதிகாரியின் தொடர்பை மூடி மறைக்கிறது திமுக அரசு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் குற்றச்சாட்டு!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies