சிகரெட் சூடு, 44 காயங்கள், மூளையில் ரத்த கசிவு - அஜித் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்!
Apr 29, 2026, 10:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிகரெட் சூடு, 44 காயங்கள், மூளையில் ரத்த கசிவு – அஜித் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 4, 2025, 09:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீசார் கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்தது பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது.

அந்த அறிக்கையின் அடிப்படையில், அஜித்குமாரின் உடலில் உள்ளே, வெளியே என 60-க்கும் மேற்பட்ட காயங்களும், மிளகாய் பொடியை செலுத்தியதற்கான தடயங்களும் இருப்பதை அறிய முடிகிறது.

சுமார் 44 இடங்களில் வெளிப்புற காயங்கள் இருப்பதாகவும், அதில் 12 காயங்கள் சிராய்ப்பு காயங்கள் என்றும், மீதமுள்ளவை அனைத்தும் ரத்தக் கட்டு காயங்கள் என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காயங்கள் ஒவ்வொன்றும் பல தாக்கங்களை உள்ளடக்கியதை காட்டுவதாகவும், ஒரே இடத்தில் மீண்டும், மீண்டும் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதையும் காட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காயங்கள் பல்வேறு கோணங்களில் உள்ளதால், பலர் சேர்ந்து பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கியிருக்க வாய்ப்பு உள்ளதை அறிக்கையின் மூலம் அறிய முடிகிறது.

இரும்பு, பிளாஸ்டிக் பைப், ரப்பர் போன்ற ஆயுதங்களால் அஜித்குமாரை தாக்கியிருக்கலாம் என்றும், இது ஒருவரை கட்டி வைத்து, பலபேர் பல இடங்களில் தாக்கியிருப்பதற்கான சாத்தியத்தை காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கபாலத்தில் அடியும், மூளையின் உள்ளே ரத்த கசிவும் உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்தி காயப்படுத்தப்பட்டிருப்பதாகவும், தலையில் கம்பை வைத்து தாக்கியதில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிகரெட் சூட்டால் சித்ரவதை செய்யப்பட்டது பற்றிய தகவலும் மருத்துவ அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

சட்டங்களுக்கு எதிரான இந்த சித்ரவதை தாக்குதல் திட்டமிட்டு, தொடர்ந்து, பல மணி நேரங்கள் நடந்து இருக்கக் கூடியதை காட்டுவதாக பார்க்கப்படுகிறது.

இந்த அளவிலான காயங்கள், ஒரே நேரத்தில் பலர் சேர்ந்து தொடர்ச்சியாக அடிக்கும்போது உருவாகும் காயங்களே என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அஜித்குமார் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சாதாரண மனிதர்களால் தாங்கவே முடியாது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Tags: Ajith Kumar murderMadapuramsivaganalockupdeathSivaganga district policethirupuvanm police station. Ajith kumar motherajith postmodem report
ShareTweetSendShare
Previous Post

விருதுநகர் அருகே கட்டிட வசதி கோரி அரசுப்பள்ளி மாணவர்கள் போராட்டம்!

Next Post

அஜித் கொலையில் ஐஏஎஸ் அதிகாரியின் தொடர்பை மூடி மறைக்கிறது திமுக அரசு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் குற்றச்சாட்டு!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies