சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் - எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாஞ்சலி!
Jul 4, 2025, 06:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாஞ்சலி!

Web Desk by Web Desk
Jul 4, 2025, 09:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாஞ்சலி செலத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரின் தலைச்சிறந்த சீடரும், உலகப் புகழ்பெற்ற சொற்பொழிவுகளுக்கு சொந்தக்காரருமான சுவாமி விவேகானந்தர் அவர்களின் நினைவு தினம் இன்று. ஒழுக்கநெறிக்கும் சகோதரத்துவத்திற்கும் சான்றாக வாழ்ந்தவர், உலகம் அமைதியாக வாழவேண்டும் என்பதனை தனது ஆன்மீகச் சிந்தனைகள் மூலம் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

நமது பாரத தேசத்தின் வளர்ச்சியானது, இளைஞர்களின் துடிப்புமிக்க திறன் வெளிப்படுவதிலேயே உள்ளது என்பதை தீவிரமாக நம்பியவர், இளைய சமுதாயத்தை எழுச்சியூட்டும் விதமாக ஏராளமான பொன்மொழிகளை வழங்கிச் சென்றுள்ளார். சுவாமி விவேகானந்தர் அவர்களின் பொன்மொழிகளுக்கேற்ப வாழ்ந்து தேசத்தை முன்னேற்றுவோம்; சுவாமிகளின் நினைவினை போற்றுவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்,.

அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், நமது நாட்டின் கலாச்சாரத்தையும்,, உயரிய ஆன்மிகக் கோட்பாடுகளையும், உலக அரங்கில் கொண்டு சென்று பெருமை சேர்த்த வீரத் துறவி, சுவாமி விவேகானந்தர் அவர்களது நினைவுதினம் இன்று. ஒட்டு மொத்த தேசத்திற்கும் ஆன்மீக வழிகாட்டியாக, கலங்கரை விளக்கமாக வெளிச்சம் கொடுத்தவர் என தெரிவித்துள்ளார்.

ஆழ்ந்த சிந்தனைவாதியாகவும், பன்மொழிப் புலமை கொண்டவராகவும் திகழ்ந்தவர். தன்னுடைய ஆழ்ந்த ஆன்மீகம் மற்றும் தேசபக்தி உரைகளால் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, அவர்களை சிறந்த சிந்தனையாளர்களாக உருவாக்கியவர். தேச நலனுக்காகவும், ஏழை எளிய மக்கள் முன்னேற்றத்திற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த சுவாமி விவேகானந்தர் அவர்களது நினைவைப் போற்றி வணங்குகிறோம் என்றும் கூறியுள்ளார்.

நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பதிவில்,  வீரத் துறவி விவேகானந்தர் அவர்களின் நினைவுதினம் இந்தியா ஒரு ஆன்மீக பூமி! இந்தியர்கள், ஆங்கிலேயர்களிடம் தன்மானமிழந்து அடிமைகளாய் வாழ்ந்தபோது, நம்மைத் தட்டியெழுப்பி, வீறுகொண்டெழுந்து சுதந்திர காற்றை சுவாசிக்க காரணமான பல்லாயிரம் தியாகிகளில் விவேகானந்தரும் ஒருவர்.

அவருடைய பேச்சும் எழுத்தும், இந்தியர்கள் மத்தியில் விடுதலை உணர்வை ஊட்டின. இந்திய விடுதலைப் போராட்டம் விவேகானந்தர் வருகைக்குப் பிறகு வேறு ஒரு பரிமாணத்தை எட்டியது. இதனால்தான், சுவாமி விவேகானந்தரை, ‘தேசபக்த ஞானி’ என்றும் அழைக்கின்றோம். சுவாமி விவேகானந்தரின் எழுத்துக்களை நாம் வாசித்தால், நம் நாட்டுக்கு நாமும் எதாவது செய்ய வேண்டும் என்ற வேட்கை எழும்.

”எதிர்கால இந்தியா முன்பு எப்போதும் இருந்ததை விடவும் மிகுந்த சிறப்போடும் பெருமையோடும் விளங்கப் போகிறது” என்று சுவாமி விவேகானந்தர் தீர்க்க தரிசனமாகக் கூறியிருந்தார். நம் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சியில், விவேகானந்தரின் கனவை நனவாக்கிவிட்டோம் என தெரிவித்துள்ளார்,

Tags: L MuruganannamalaiSwami Vivekananda's death anniversaryBJP State President Nainar Nagendran trubute
ShareTweetSendShare
Previous Post

அஜித் கொலையில் ஐஏஎஸ் அதிகாரியின் தொடர்பை மூடி மறைக்கிறது திமுக அரசு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் குற்றச்சாட்டு!

Next Post

சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றம் பிளிட்ஸ் செஸ் போட்டி – மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி குகேஷ் முதலிடம்!

Related News

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : துணை மேயர் மகேஷ் குமார்

ஆசிரியர் தற்கொலை முயற்சி – பள்ளி வளாகத்தில் பரபரப்பு!

ஆப்ரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் அணு ஆயுதப் போரின் விளிம்பிற்கு சென்றது – சனாவுல்லா

பாமக சட்டமன்ற குழு கொறடாவாக மயிலம் சிவக்குமார் தேர்வு!

2 வாரங்களில் 1000 முறை நிலநடுக்கம் : அச்சத்தில் ஜப்பான் மக்கள்!

நாகை : ஆக்கிரமிப்புகளை அகற்றிய ஊழியர்களிடம் வாக்குவாதம்!

பொன்முடிக்கு எதிரான புகார்கள் மீது காவல்துறையினர் புலன் விசாரணை செய்ய தயங்கினால், வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும் – நீதிபதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies