எப்போ சார் திறப்பீங்க? - குமுறும் பொதுமக்கள்!
Mar 15, 2026, 06:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

Murugesan M by Murugesan M
Jul 4, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை வால்டாக்ஸ் சாலையில் கட்டி முடிக்கப்பட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளைத் திறக்காத காரணத்தினால் சாலையோரத்தில் குடிசை அமைத்து வசிக்கும் சூழலுக்கு நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் தள்ளப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் நேரத்திற்காகக் காத்திருக்காமல் உடனடியாக திறந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை வால்டாக்ஸ் சாலையில் அமைந்திருக்கும் மீனாம்பாள் சிவராஜ் நகர் எனப்படும் எம் எஸ் நகர் பகுதியில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்த மக்களுக்கு 1970களில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

அரை நூற்றாண்டுகள் கடந்து பழுதடைந்து காணப்பட்ட குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதிய குடியிருப்புகளைக் கட்டும் பணி கடந்த 2019ம் ஆண்டு தொடங்கியது. 18 மாதங்களில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகள் வசம் ஒப்படைக்கப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதி தற்போது வரை நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.

2019 ஆம் ஆண்டு வேகமாகத் தொடங்கிய கட்டுமானப்பணி கொரானா பரவல் காரணமாக அடுத்த இரு ஆண்டுகளுக்கு தடைப்பட்டது. திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு அப்பணிகள் மீண்டும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆமை வேகத்திலேயே நடைபெற்றதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குடியிருப்புகள் கட்டி முடித்து தங்களிடம் வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் அருகிலேயே வாடகை வீடு எடுத்துத் தங்கிய மக்கள் இப்போது வரை அதே வாடகை வீட்டில் தான் வசிக்கின்றனர்.

176 குடியிருப்புகள் இருந்த நிலையில் தற்போது வெளிப்பகுதியில் குடிசை அமைத்து வாழ்ந்து மக்கள் உட்பட 308 பேருக்கு வீடுகள் ஒதுக்குவதற்கான டோக்கனும் வழங்கப்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்டதாகக் கருதப்படும் வீடுகளை தங்கள் வசம் ஒப்படையுங்கள் என ஒவ்வொரு முறை கேட்கும் போதும் புதுப்புது காரணங்களைச் சொல்லி அலைக்கழிப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எம் எஸ் நகருக்குப் பின்பாக தொடங்கப்பட்ட யானைக்கவுனி, திருவிக நகர், முல்லை நகர் ஆகிய நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில் முதலமைச்சர் திறந்து வைக்கும் தேதிக்காக தங்களைக் காக்க வைப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகள் திறக்கப்படுவதில் ஏற்படும் தாமதத்தால் மீண்டும் குடிசைகள், கொட்டகைகள் அமைத்து 1970களில் வாழ்ந்த அவல நிலைக்கே நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தள்ளப்பட்டுள்ளனர். கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளை உடனடியாக திறப்பதோடு அதனை உரியப் பயனாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்துள்ளது.

Tags: chennai news todayWhen will you opensir? - The public is angrytoday chennai news
ShareTweetSendShare
Previous Post

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies