மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் "தனி ஒரு மூதாட்டி"!
Jul 28, 2026, 09:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Murugesan M by Murugesan M
Jul 4, 2025, 08:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பொதுமக்கள் செல்லவே அச்சப்படும் மலைக்கிராமத்தில் தனி ஒருவராக வசித்து வருகிறார் நூறு வயதைக் கடந்த மூதாட்டி குட்டியம்மாள். தான் பிறந்து வளர்ந்த இடத்தைவிட்டு வெளியேற மனமில்லாமல் அங்கேயே குடியிருக்கும் மூதாட்டி குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காரையாறு மற்றும் சேர்வலாறு என்ற இருபெரும் அணைகள் அமைந்துள்ளன.

அந்த அணைகளைச் சுற்றி பழங்குடியின மக்கள் வசித்து வரும் நிலையில் அங்கிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இஞ்சிகுழி என்ற இயற்கை எழில் கொஞ்சும் மலைக்கிராமம் ஒன்று அமைந்துள்ளது. வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இந்த மலைக்கிராமத்தில் தனி ஒருவராக வசித்து வருகிறார் 110 வயதுடைய மூதாட்டி குட்டியம்மாள்

இஞ்சிகுழி கிராமத்தில் மிளகு, கிராம்பு, ஏலம் போன்றவற்றை விவசாயம் செய்துவரும் விவசாயிகள் அவ்வப்போது வந்து செல்லும் நிலையில் மூதாட்டி குட்டியம்மாள் மட்டும் இதே பகுதியிலேயே தங்கியுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியராக இருந்த விஷ்ணுவின் முயற்சியால் மாதம் தோறும் முதியோர் உதவித் தொகையைப் பெற்றுவரும் மூதாட்டிக்கு உதவ யாரும் முன்வரவில்லை என்றாலும் தன்னம்பிக்கையோடு அதே பகுதியிலேயே வாழ்ந்து வருகிறார்

போதுமான வசதி இல்லாத காரணத்தினாலும், வனவிலங்குகளின் நடமாட்டத்தாலும் இங்குக் குடியிருந்த மற்ற குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் வேறு பகுதிக்குச் சென்றுவிட்ட நிலையில் தான் பிறந்து வளர்ந்து இடத்தை விட்டு வெளியேற மறுக்கிறார் மூதாட்டி குட்டியம்மாள்

வயது நூற்றைக் கடந்தாலும், முதுமை வாட்டி வதைத்தாலும் குட்டியம்மாள் மனதில் இருக்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் இன்னும் பல ஆண்டுகள் அவரை வாழவைக்கும்.

Tags: Miracle in the Western Ghats: "A lonely old woman" living among wild animalsமலையில் அதிசயம்தனி ஒரு மூதாட்டிவன விலங்குகள்
ShareTweetSendShare
Previous Post

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

Next Post

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies